தினமணி 06.01.2014
நத்தம் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்
நத்தம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வனத்துறை இலாகாவிடம் இருந்து பெறப்பட்ட இடத்தில் இருந்த வனத்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலைய அமைப்புக்கான வேலைகள் தொடங்கின.
இப்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பேருந்துகள் வந்து செல்ல இடையூறாக இருந்து வருகிறது. நத்தத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் நத்தத்தில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் மாலை நேரங்களில் பஸ்சில் ஏறுவதற்கு அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வியாபாரம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல வேலைகளுக்காக வருபவர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக 2 மாதங்களுக்கு முன் பேரூராட்சிக்கு 2 ஏக்கர் நிலத்தை வனத்துறை வழங்கியது. அந்த இடத்தில் சனிக்கிழமை கனரக இயந்திரங்களைக் கொண்டு பணிகள் தொடங்கின.