Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

146 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 07.11.2009

146 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி, நவ. 6: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காவல் மற்றும் போக்குவரத்துத் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் பேருந்துகளிலிருந்து 146 காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ரூபேஷ்குமார் மீனா, திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திருச்சி முனுசாமி, ஸ்ரீரங்கம் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் தங்கவேலு மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தடை விதித்தும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 146 காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் எனபோக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.