Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிதம்பரம் பஸ் நிலையம் திறப்பு

Print PDF

தினமணி 15.12.2009

சிதம்பரம் பஸ் நிலையம் திறப்பு

சிதம்பரம், டிச. 14: 2008-09 ஆம் ஆண்டு வெள்ள நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் செலவில் நகராட்சியால் புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் பஸ் நிலையம் திறக்கப்பட்டது.

÷கடலூர், சென்னை பஸ்கள் நிற்கும் பகுதி முழுவதிலும் சிமெண்ட் சாலை, பஸ் நிற்கும் தடுப்புக் கட்டைகள், நடைபாதை ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன. ÷

இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். ஆணையாளர் பி.ஜான்சன் முன்னிலை வகித்தார். பொறியாளர் மாரியப்பன் வரவேற்றார். பஸ் நிலையத்தில் கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான கே.ஆர்.செந்தில்குமார் திறந்து வைத்தார்.

÷இந்நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ராமச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் த.ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், இரா.வெங்கடேசன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.