தினமணி 25.01.2010
வாணியம்பாடியில் ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம்
வேலூர்,ஜன.24: வாணியம்பாடியில் ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாணியம்பாடி நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.3.30 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக மற்றும் தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளதை அடுத்து, அனைத்து மேல் நடவடிக்கைகள் எடுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 171 பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி வளாகத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்நல அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை நகர்மன்றத் தலைவர் வி.சிவாஜிகணேசன் திறந்து வைத்தார். ஆணையர் எம்.ராஜேந்திரன், பொறியாளர் இளஞ்செழியன், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி.பாரூக், நகர் நல அலுவலர் பிரியாராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் 34 பேரும் பங்கேற்றனர்.