தினமணி 04.02.2010
புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகள் ஆய்வு
வந்தவாசி, பிப். 3:வந்தவாசியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் துரை. சந்திரசேகரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வந்தவாசி காமராஜர் நகர் அருகில் 5.38 ஏக்கரில் ரூ.4.11 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 29 பஸ் நிறுத்தும் இடங்கள், 31 கடைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் துரை.சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டட பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன், ஆணையர் எஸ்.சசிகலா,துணைத் தலைவர் வாசுகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்