Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனி பஸ் நிலையத் திறப்பு விழா: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி 15.02.2010

பழனி பஸ் நிலையத் திறப்பு விழா: அமைச்சர் ஆய்வு

பழனி, பிப். 14: பழனியில் புதிய பஸ் நிலைய விரிவாக்கம் திறப்பு விழா பணிகளை தமிழக வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

பழனியில் ரூ.6.6 கோடி செலவிலான புதிய பஸ் நிலைய விரிவாக்கத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தற்போது பஸ் நிலையத்தில் மேடை அமைக்கும் பணி, பூங்கா, செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இப் பணிகளை தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். உடன், பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், நகரச் செயலாளர் வேலுமணி, ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Last Updated on Monday, 15 February 2010 10:48