Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.6 கோடியில் திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி 10.03.2010

ரூ.6 கோடியில் திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம்

விழுப்புரம், மார்ச் 9: திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் கட்ட, அரசு அனுமதி அளித்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திண்டிவனம் நகராட்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையம் 1969-ம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 பஸ்களை நிறுத்தும் வசதி கொண்ட சிறிய பஸ் நிலையமாகும்.

நகர வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, திண்டிவனம் நகருக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் 30 பஸ்களை நிறுத்தும் வகையில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கை இவ்வாணை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 10 March 2010 09:04