Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புழுதி கிளப்பும் பஸ் ஸ்டாண்ட் தார் ரோடு போடும் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 18.03.2010

புழுதி கிளப்பும் பஸ் ஸ்டாண்ட் தார் ரோடு போடும் பணி தீவிரம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் புதிய பஸ்ஸ்டாண்டின் நூழைவு வாயில் பகுதியில் தார்ரோடு அமைக்காமல் செம்மண்ணாக காணப்பட்டது. இதனால், பஸ்கள் செல்லும் போது, மண் புழுதி காற்றில் பறந்ததால் பயணிகள் மூச்சு திணறிவந்தனர்.மேலும், மழை காலங்களில், பஸ்ஸ்õடண்டுக் குள் பஸ்கள் உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்பேதும், செம்மண்ரோடு, சேறாக மாறிவிடும். இதனால், பொதுமக்கள் பஸ்ஸ்õடண்டுக்குள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி வந்தது.மேலும், பொள்ளாச்சி,கோவை ரோட்டில், செம் மண் சேறு படிந்துள்ளதால், இவ்வழியாக வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கி விபத்துக்களில் சிக்கி கொள் கிறது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம், தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்து, தார்ரோடு அமைப்பதற்காக, இரண்டு முறை செம்மண், ஜல்லி கலந்து ரோடு போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஒட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர