தினமணி 07.04.2010
சென்னைக்கு 2 புதிய பஸ்கள்
கும்மிடிப்பூண்டி, ஏப்.6: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் இருந்து சென்னைக்கு 2 புதிய பஸ்கள் இயக்கப்படுவதை முன்னிட்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
÷கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் 6 மாதத்துக்கு முன்பு ஆரணியில் இருந்து புதுவாயல் வழியாக சென்னை வள்ளலார் நகருக்கு பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் திடுமென நிறுத்தப்பட்டது.
÷பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பாட்டில் இருந்த இந்த பஸ் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆரணி நகர திமுக செயலர் கண்ணதாசன் மற்றும் திமுகவினர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து மேற்கண்ட தடத்தில் பஸ் வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைத்தனர்.
÷அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆரணி பேரூராட்சியில் இருந்து தடம் எண் 532 என்ற 2 புதிய பஸ்கள் சென்னை வள்ளலார் நகருக்கு இயக்கப்பட்டது.
÷இதையொட்டி தொடக்க விழா ஆரணி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் கோ.வெற்றிவீரன் பஸ்ûஸ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
÷இந்த விழாவில் ஆரணி நகர தி.மு.க. செயலர் கண்ணதாசன், தி.மு.க. வழக்கறிஞர்கள் அன்புவாணன், கரிகாலன், முஸ்தபா, முனீர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.