Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பத்மநாபபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

Print PDF

தினமணி 19.04.2010

பத்மநாபபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

தக்கலை, ஏப். 18: பத்மநாபபுரம் நக ராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், கலையரங்கம், மழைநீர் வடிகால் ஆகியவற்றை ஹெலன் டேவிசன் எம்.பி. திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெலன்டேவிட்சன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், வாழவிளை காலனியில் அமைக்கப்பட்ட கலையரங்கம்,

இராமன்பரம்பு பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் இந்திரா முன்னிலை வகித்தார்.

சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் மோகன், உதவியாளர் மில்டன், பேராசிரியர் டால்பின்ராஜா, தக்கலை புனித எலியாசியார் ஆலய பங்குப் பேரவைச் செயலர் வின்சென்ட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 19 April 2010 10:45