Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட ரூ.4.5 கோடி நிதி

Print PDF

தினமலர் 22.04.2010

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட ரூ.4.5 கோடி நிதி

சாத்தூர் : சாத்தூரில் மூன்றரை ஏக்கரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட அரசு 4.5 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சாத்தூரில் தற்போதைய பஸ் ஸ்டாண்ட் 65 சென்ட் பரப்பில் அமைந்துள்ளது. அதிகரித்துவரும் வாகனங்களின் காரணமாக இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இப்பிரச்னை நகராட்சி மன்ற கூட்டத்திலும் எதிரொலித்து. இதையடுத்து மரியன்ஊரணியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மரியஊரணியில் இருந்த தண்ணீர், மோட்டார் மூலம் வெளியேற்றபட்டது. பின் அங்கு சர்வே மற்றும் மண் பரிசோதனை செய்யப்பட் டது. மூன்றரை ஏக்கரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட அரசு 4.5 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது என நகராட்சி தலைவர் குருசாமி கூறினார்.

Last Updated on Thursday, 22 April 2010 07:13