தினமலர் 28.04.2010
'டிராபிக் ஐலண்ட்' திட்டம்: தேனி நகராட்சிக்கு மாற்றம்
கம்பம்: கம்பம் நகராட்சியில் 'டிராபிக் ஐலண்ட்' அமைக் கும் திட்டம் ரூ.25 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந் தது. இது தற்போது தேனி நகராட்சியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மேலாண்மை திட்டத் தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் போக்குவரத்தை சரி செய்யும் நோக்கத்தில், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் 'டிராபிக் ஐலண்ட்' அமைக்கப்படும். சிக்னல்கள் அமைக் கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்படும். கம்பம் நகராட்சியில் எம்.எல்.ஏ., அலுவலக சந்திப்பில் 'டிராபிக் ஐலண்ட்' அமைக்க நகராட்சி நிர்வாகம் மதிப்பீடுகள் தயார் செய்தது. இந்நிலையில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் சார்பில் வழங்கப்படும் 25 லட்ச ரூபாய் நிதி, தேனி நகராட்சிக்கு தரப்பட்டுறவிட் டது. கம்பத்திற்கு வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திட் டம் கைவிட்டுப் போனதால், கம்பம் நகராட்சி நிர்வாகம் தயாரித்த மதிப் பீடு கிடப்பில் போடப்பட் டுள்ளது. தேனி நகராட்சி நிர்வாகம் 'டிராபிக் ஐலண்ட்' அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். விரைவில் தேனி நகரில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது