Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

திண்டிவனம் பஸ் நிலைய ஆரம்ப கட்ட பணி துவக்கம் : அரசு நிர்வாக அனுமதி

Print PDF

தினமலர் 09.03.2010

திண்டிவனம் பஸ் நிலைய ஆரம்ப கட்ட பணி துவக்கம் : அரசு நிர்வாக அனுமதி

திண்டிவனம் : திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு மண் பரிசோதனை பணி துவங்கியது. திணடிவனம் ஏரியில் புதிய பஸ் நிலையம் கட்ட அரசு முடிவு செய் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோர்ட் தடை விதித்தது. தற்போது தமிழக அரசு புதிய பஸ் நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையில் கூறியிருப்பதாவது: திண்டிவனம் ஏரியில் ஆறு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அரசு ஆணை வழங் கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிர் வாக இயக்குனர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது. மேற்படி ஆணையை எதிர்த்து கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதையடுத்து இடைக்கால தடை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டில் அந்த தடை உத்தரவை மாற்றம் செய்து, புதிய பஸ் நிலையம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மட்டும் தொடர அனுமதி வழங்கியுள்ளது. புதிய பஸ் நிலையம் கட்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஆதாரம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் திண்டிவனம் நகர மன்றத் தில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, 8 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி புதிய பஸ் நிலையம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இந்த அரசு ஆணை கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நேற்று(8ம் தேதி) பஸ் நிலையத்தில் கட்டடங்கள் கட்டும் பகுதியில் மண் பரிசோதனை செய்ய இடம் குறியீடு செய்யும் பணி நடந்தது. இந்த குறியீடுகளை நகராட்சி பணியாளர்கள் செய்தனர். இன்று(9ம் தேதி) புதுச்சேரியிலிருந்து மண் பரிசோதனைக்கு மண் எடுத்து செல்ல நிபுணர்கள் வருகின்றனர். நீண்ட கால இழுபறிக்குப் பின் திண்டிவனம் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

Last Updated on Tuesday, 09 March 2010 06:19
 

பஸ் ஸ்டாண்ட் பணி ஆய்வு

Print PDF

தினமலர் 06.03.2010

பஸ் ஸ்டாண்ட் பணி ஆய்வு

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் 37 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வரும் புது பஸ் ஸ்டாண்ட் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஓசூர் அடுத்த கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 37 லட்சத்து 30 ரூபாயில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. இப்பணிகளை டவுன் பஞ்சாயத்து செயற்பொறியாளர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பணிகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், விரைந்து பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளர் சுபாஷ்போஸ், கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் விஜயராணி, தேன்னகனிக்கோட்டை செயல் அலுவலர் சந்திரசேகர், உதவி பொறியாளர் சம்பத்குமார், பணி ஆய்வாளர் மகேந்திரன், நாகராஜ், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:14
 

பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்: மேயர் ஆய்வு

Print PDF

தினமணி 26.02.2010

பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்: மேயர் ஆய்வு

திருச்சி, பிப். 25: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சத்திரம் பேருந்து நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் பேருந்து பயணிகளுக்கு நடைபாதையுடன்கூடிய நவீன நிழல்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிழல்குடை அமைக்கப்பட்ட பகுதியில் தற்போது ரூ. 13 லட்சத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா பார்வையிட்டார்.

புதைச் சாக்கடை இணைப்பு வேண்டும் என கோரிக்கை வரப்பெற்ற திருவானைக்கா தெற்கு உள்வீதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கீழக்கொண்டையம்பேட்டை குடியிருப்புப் பகுதிகளை மேயர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், கோட்டத் தலைவர் த. குமரேசன், உதவி ஆணையர் வி. நடராஜன், மாமன்ற உறுப்பினர் பி. விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Last Updated on Friday, 26 February 2010 09:22
 


Page 40 of 57