Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

பழனி பஸ் நிலையத் திறப்பு விழா: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி 15.02.2010

பழனி பஸ் நிலையத் திறப்பு விழா: அமைச்சர் ஆய்வு

பழனி, பிப். 14: பழனியில் புதிய பஸ் நிலைய விரிவாக்கம் திறப்பு விழா பணிகளை தமிழக வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

பழனியில் ரூ.6.6 கோடி செலவிலான புதிய பஸ் நிலைய விரிவாக்கத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தற்போது பஸ் நிலையத்தில் மேடை அமைக்கும் பணி, பூங்கா, செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இப் பணிகளை தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். உடன், பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், நகரச் செயலாளர் வேலுமணி, ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Last Updated on Monday, 15 February 2010 10:48
 

பழனியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு

Print PDF

தினமணி 15.02.2010

பழனியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு

பழனி, பிப்.14: பழனியில் ரூ.6.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் பிப்.15-ம் தேதி திறக்கப்படுகிறது.

பழனியில் தற்போதுள்ள பஸ் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருவிழா நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பஸ் நிலையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டது.

நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் பஸ் நிலையம் அருகில் உள்ள வையாபுரி கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதி பெறப்பட்டு நகராட்சி, திருக்கோயில் நிதி மூலம் சுமார் ஆறரை கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டது.

ஒரே சமயத்தில் ஏராளமான பஸ்கள் நிற்குமாறு புதிய பஸ் நிலைய வளாகம் கட்டப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தை பிப்ரவரி 15-ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சுரேஷ்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் பெரியசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், அரசு கொறடா சக்கரபாணி, சித்தன் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ., ஆட்சியர் வள்ளலார், நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

Last Updated on Monday, 15 February 2010 10:47
 

பழநியில் ரூ.6.60 கோடியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம்:பிப்.15ல் பயன்பாட்டிற்கு வருகை

Print PDF

தினமலர் 05.02.2010

பழநியில் ரூ.6.60 கோடியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம்:பிப்.15ல் பயன்பாட்டிற்கு வருகை

பழநி:பழநியில் ரூ. 6.60 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ்ஸ்டாண்ட் வரும் பிப். 15ல் பயன் பாட்டிற்கு வருகிறது.பழநியில் 2 ஏக்கரில் தற்போது வ..சி. பஸ் ஸ்டாண்ட் இயங்குகிறது. விழாக்காலங்களில் பக்தர்கள் பழநியிலிருந்து வெளியூர் செல்ல சிரமம் அதிகமாக உள்ளது. இதைப் போக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டை ஒட் டிய 5 ஏக்கரில் ரூ.6.60 கோடியில் விரிவாக்கப் பணி கடந்த மார்ச் 2008ல் துவங்கியது.

தேவஸ்தானம் சார்பில் 50 சதவீத தொகை தரப்பட்டது. இப்பஸ்ஸ்டாண்ட்டை பிப். 15ல் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.வசதிகள்: பழைய,விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ்ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் 52 ரேக்குகளில் பஸ்கள் நிறுத்தலாம். விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் ஸ்டாண்டில் 51 கடைகள் கட்டப்பட்டுள் ளன. 24 மணி நேர குடிநீர், கழிப் பறை வசதி செய்யப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 200 பயணிகள் ஓய்வெடுக்கலாம். நேரக் காப்பாளர், நிர்வாக அலுவலக அறைகள் உள்ளன.

மலைக்கோயிலை காணும் வகையில் பஸ் ஸ்டாண்ட் மேல்தளத்தில் டெலஸ் கோப் வசதி செய்யப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் தகவல் மையமும் அமைக்கப்படுகிறது. நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில்,"சமீபத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட்களில் பழநி பஸ்ஸ்டாண்ட் அளவில் பெரியதாகும். பக்தர்கள், பயணிகள் வசதிக்காக கட் டண முறையில் ஏ/சி ஹால் கட்ட திட்டமிட் டுள்ளோம்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 8 இடங்களில் நிரந்தர குடிநீர் தொட்டி வைக்கப் படும். பஸ்ஸ்டாண்ட் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க ஆலோசித்து வருகிறோம். இயற்கை சூழலை ஏற்படுத்தும் வகையில் புல்வெளி அமைத்துள்ளோம்,' என்றார்.

Last Updated on Friday, 05 February 2010 06:41
 


Page 42 of 57