Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

வாலாஜாவில் புதிய பஸ்நிலையம் இந்த ஆண்டு திட்டம் நிறைவேறும் எம்எல்ஏ., காந்தி உறுதி

Print PDF

தினமலர் 07.01.2010

வாலாஜாவில் புதிய பஸ்நிலையம் இந்த ஆண்டு திட்டம் நிறைவேறும் எம்எல்ஏ., காந்தி உறுதி

வாலாஜாபேட்டை:"வாலாஜாபேட்டை நகரத்துக்கு புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டம் இந்த ஆண்டு நிறைவேறும்' என எம்எல்ஏ., காந்தி உறுதியளித்தார். வாலாஜாபேட்டை நகராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன ஆட்டிறைச்சி கூடம், 2 லட்சம் ரூபாய் செலவிலான கூடுதல் கட்டடம் திறப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்பொருட்டு போலீஸ் மற்றும் வியாபாரிகளுடன் இணைந்து நிறுவப்பட்டு வரும் இரும்பு தடுப்புவேலி (பேரிகார்டு) தொடக்கம், ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பிரசவித்த பெண்கள் 30 பேருக்கு தலா 600 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்குதல், 30 பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி திட்டத்தின் கீழ், இலவச கண் கண்ணாடி வழங்குதல், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்கான விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சேர்மன் நித்தியானந்தம் தலைமை வகித்தார். தணை தலைவர் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார். கமிஷனர் பாரிஜாதம் வரவேற்றார். புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் எம்எல்ஏ., காந்தி பேசியதாவது:இந்த நகரம் ஒரு நல்ல நகரம். அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் நிகழும் விபத்துக்களை தவிர்க்கும்பொருட்டு, ஒருவழிப்பாதை ஆக்கும் முயற்சி மேற்கொண்டோம். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, அவர்கள் சொல்லும் காரணம் சரியானதாக இருந்ததால் அது சாத்தியமில்லை என்று அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றி, நடைபாதைகள் அமைத்து பேரிகார்டு நிறுவலாம் என இன்ஸ்பெக்டர் சீத்தாராம் கூறியதையடுத்து, அந்த திட்டம் பொதுமக்கள், வியாபாரிகள், அனைத்து கட்சியினர் ஒத்துழைப்போடு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் இப்போது நடந்து வருகிறது.இதற்காக இப்பகுதி மக்கள் வழங்கிய நன்கொடை பட்டியலை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு பண உதவி செய்யும் வியாபாரிகள், கல்வி நிறுவனத்தினரை பாராட்டுகிறேன்.

பணம் இருக்கும் எல்லோருக்கும் மனம் இருக்காது. இங்கு இருப்பவர்களுக்கு மனம் நிறைய உள்ளது. நாம் நல்லது செய்கிறோம் என்றால், மக்களும் தானாக வந்து நன்கொடை வழங்குவார்கள். அப்படித்தான் இந்த "பேரிகார்டு' திட்டத்தை வரவேற்று நன்கொடை வாரி வழங்குகிறார்கள். இந்த பணி முடிந்து மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைத்த பிறகு மற்ற நகரத்துக்கு முன்மாதிரியாக வாலாஜா அமையும்.

இந்நகரத்துக்கு புதிய பஸ்நிலையம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு விடும். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசும் பணம் ஒதுக்க தயாராக உள்ளது. மேலும், பாதாள சாக்கடை திட்டமும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. நாம் செய்வதை மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். மக்கள் பணியை செய்யாதவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவே முடியாது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்தால் எம்எல்ஏ., "சீட்' கேட்கவே யாரும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் கவனித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் சீத்தாராம், சுகாதார துறை துணை இயக்குனர் சுரேஷ், கவுன்சிலர்கள் சரவணன், அக்பர்ஷரீப், ரமேஷ், சாதிக்பாஷா உட்பட பலர் பேசினர்.விழாவில், பேரிகார்டு அமைக்க நிதியுதவி அளித்தவர்களில் பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவம், கவுரவ தலைவர் பீஷ்மாச்சாரி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், ஜெயின் தங்கமாளிகை அதிபர் சஜன்ராஜ் ஜெயின், குளோப் டைல்ஸ் அதிபர் அக்பர்ஷரீப் உட்பட பங்கேற்ற அனைவருக்கும் எம்எல்ஏ., காந்தி சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தார். நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:38
 

குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.11 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி 04.01.2010

குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.11 கோடியில் திட்டம்

உதகை ஜன.3: குன்னூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதுள்ள பேருந்து நிலையத்தையொட்டியுள்ள தீயணைப்பு நிலையத்தை வண்டிச்சோலை பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகைக்கு அடுத்தாற்போல பெரிய நகரம் குன்னூராகும். ஏராளாமான கிராமப் பகுதிகளை உள்ளடக்கியுள்ள குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. குன்னூரில் உள்ள பேருந்து நிலையம் சிறிய பேருந்து நிலையமாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 15 பேருந்துகளை மட்டுமே நிறுத்துவதற்கு இட வசதி உள்ளது. ஆனால் இப்பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 70 அரசு பேருந்துகளும், 33 தனியார் மினி பேருந்துகளும் வந்து செல்கின்றன.

இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலாவதோடு, பொதுமக்களும், பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் குறித்த நேரத்திற்கு பேருந்துகள் வராதது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வது ஆகியவையும் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாகும்.

எனவே, குன்னூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தினால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தடையாக இருப்பது இப்பேருந்து நிலையத்தையொட்டியுள்ள தீயணைப்பு நிலையம்தான்.

எனவே, தீயணைப்பு நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலையத்தை உதகை-குன்னூர் சாலையில் மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு போதிய இடவசதி இல்லாததால் அங்கு செல்ல முடியாது என தீயணைப்புத்துறையினர் மறுத்து விட்டனர்.

இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்ததால் பேருந்து நிலைய விரிவாக்கமும் சிக்கலிலேயே இருந்தது. ஆனால், தற்போது இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக குன்னூர் நகர்மன்ற தலைவர் ராமசாமி தெரிவித்ததாவது:

குன்னூரில் பேருந்து நிலையத்தையொட்டியுள்ள தீயணைப்பு நிலையத்தை வண்டிசோலை பகுதிக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சமுதாயக் கூடம் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியில் போதிய இட வசதியோடு, தண்ணீர் வசதியும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இதையடுத்து குன்னூர் பேருந்து நிலையம் விரிவாக்கப்படும். இதற்காக ரூ.11 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்காக அரசின் அனுமதியை கோரும் தீர்மானமும் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

இப்பேருந்து நிலையத்தில் பயணிகல் இருக்கை வசதி, குடிநீர், கழிப்பிடம், வணிக வளாகம், பேருந்துகளை நிறுத்துவதற்கான கூடுதல் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றார்.

Last Updated on Monday, 04 January 2010 08:59
 

1,500 மாநகர பஸ்களில் விரைவில் ஜிபிஎஸ் வசதி

Print PDF

தினமணி 21.12.2009

1,500 மாநகர பஸ்களில் விரைவில் ஜிபிஎஸ் வசதி

சென்னை, டிச. 20: மேலும் 1,500 மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வழிகாட்டும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

÷சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் 3,257 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தினமும் இயக்கப்படுகின்றன.

÷சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயக்கப்படும் இந்த மாநகர பஸ்களில் தினமும் சராசரியாக 50.35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன என்பதை செயற்கைக்கோள் உதவியுடன் அறிந்து பொதுமக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கும் ஜி.பி.எஸ். வசதி கடந்த 2007}ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

÷திட்டத்தின் தொடக்கமாக 55 பஸ்களில் ஜிபிஎஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை மற்றும் அடையாறு உள்ளிட்ட குறிப்பிட்ட சில வழித்தடங்களில் முக்கிய பஸ் நிறுத்தங்களில் மட்டும் டிஜிட்டல் முறையில் ஒளிரும் எழுத்துகள் கொண்ட மின் பலகையில் பஸ்கள் வரும் நேரம், எண் ஆகியவை குறித்து அறிவிக்கப்பட்டது.

÷பொதுமக்களுக்கு தகவல் அளிக்கும் (பி.ஐ.எஸ்.) திட்டத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் 1,500 மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ÷இந்தத் திட்டத்துக்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி நிதி அனுமதிக்கப்பட்டது.

இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் நவீன தகவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ÷கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இருவழி மைக் சாதனம் மூலம் பஸ்ஸின் ஓட்டுநருடன் தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் ஜிபிஎஸ் வசதி மூலம் பெறலாம். ÷"அசோக் லேலாண்ட் டெலிமாட்டிக்ஸ் பிசினஸ் யூனிட்' என்ற நிறுவனம் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷வருங்காலத்தில் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்ளும் பயணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணுள்ள மாநகர பஸ் வந்து கொண்டிருக்கும் இடம், அந்த பஸ் வந்து சேரும் உத்தேச நேரம் குறித்து அறியும் வசதியையும் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டத்துக்கு ஏ.சி. பஸ்கள்: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 10 ஏ.சி. பஸ்கள் இப்போது விழுப்புரம் கோட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் தியாகராய நகர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

÷விரைவில் விழுப்புரம் கோட்டத்துக்கு மேலும் 40 ஏ.சி. பஸ்கள் மாற்றப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 45 of 57