தினமணி 17.08.2010
தேனி புதிய பஸ் நிலையத்துக்கு தொழில்நுட்ப அனுமதி
தேனி, ஆக. 16: தேனியில் அமையவுள்ள புதிய பஸ் நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் பழனிச்சாமி கூறியது: தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் சிட்கோ வளாகம் அருகில் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள நகராட்சி புதிய பஸ் நிலையத்துக்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி வசதிக் கழகம் மூலம் அரசு ரூ.11.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது பஸ் நிலையக் கட்டுமானப் பணிகளைத் துவக்க அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு மூலம் டெண்டர் கோரப்பட்டு, திட்டப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன என்றார் அவர்.