Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் 'பஸ் ஸ்டாப்' ஆனது : சுற்றுலா வாகனம், ஆம்னி பஸ்களுக்கு தனித்தனி 'பார்க்கிங்'

Print PDF

தினமலர்       17.05.2010

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் 'பஸ் ஸ்டாப்' ஆனது : சுற்றுலா வாகனம், ஆம்னி பஸ்களுக்கு தனித்தனி 'பார்க்கிங்'

மதுரை : மதுரை ஷாப்பிங் காம்ப் ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள் தனித்தனியாக 'பார்க்கிங்' செய்ய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இனி, பஸ் ஸ்டாண்டில் சிட்டி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு உடனே கிளம்பி விடும்.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல் ரோடு ரவுண்டானா, ஷாப்பிங் காம்ப் ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே., ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடந்தது.

துணை கமிஷனர் ராஜேந்திரன் , மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தனித்தனி பார்க்கிங் வசதி: இதன்படி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா வேன்கள் மட்டும் நுழைவு வாயிலின் வலதுபுறம் பார்க்கிங் செய்ய தனியாக இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. சுற்றுலா பஸ்கள் கென்னட் ரோடு பகுதியில் பார்க்கிங் செய்ய வேண்டும். அங்கு இடம் இல்லாதபோது தெற்குவெளி வீதியில் பார்க்கிங் செய்யலாம். பஸ்கள் வெளியேறும் பகுதியின் வலது புறம் டிராவல்ஸ் அலுவலகங்கள் உள்ளன.

இப்பகுதி நெடுகிலும் ஆம்னி பஸ்களை மாலை 5 முதல் இரவு 10 மணி வரை நிறுத்தலாம். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து 40 ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்படுகிறது. 40 பஸ்களையும் பார்க்கிங் செய்ய இடவசதி இல்லை. எனவே, அடுத்தடுத்து வரும் பஸ்களை பார்க்கிங் செய்ய உதவிடும் பொருட்டு, உடனே புறப்படுவதற்கு ஏற்ப தயார் நிலையில் பஸ்களை நிறுத்தி வைக்கும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

உடனே கிளம்பும் டவுன் பஸ்:திருமங்கலம், மடப்புரம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி விட்டு 15 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் புறப்படுவது வழக்கம். இனி, பெரியார் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி, அங்கேயே ஓய்வெடுக்க வேண்டும். பின், அங்கிருந்து புறப் பட்டு திண்டுக்கல் ரோடு ரவுண்டானா வழியாக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வந்து, நுழைவு வாயிலின் இடது புறம் பஸ்களைஓரிரு நிமிடங்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி கொண்டு உடனே புறப்பட வேண்டும். இதன்படி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பஸ் ஸ்டாண்டிற்கு பதிலாக 'பஸ் ஸ்டாப்' போல் செயல்படும். பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஹயத்கான் சாகிப் தெருவில் இருபுறமும் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

 

பெரம்பூர், எழும்பூர் வழியாக கொடுங்கையூர்- திருவான்மியூருக்கு புதிய பஸ் இயக்கம் ; பாடியநல்லூருக்கு 10 பஸ்கள்

Print PDF

மாலை மலர் 05.05.2010

பெரம்பூர், எழும்பூர் வழியாக கொடுங்கையூர்- திருவான்மியூருக்கு புதிய பஸ் இயக்கம் ; பாடியநல்லூருக்கு 10 பஸ்கள்

கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு புதியவழித்தடத்தில் பஸ் விடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன. இவற்றில் 1-வது வார்டு கொடுங்கையூர், பார்வதிநகர் பகுதியை உள்ளடக்கியதாகும்.

பார்வதி நகரில் பஸ் டெர்மினல் உள்ளது. இந்த பகுதியில் இருந்து மிக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு, பிராட்வே, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதிமக்கள் ஷேர் ஆட்டோ என்று சொல்லக்கூடிய "அபே" ஆட்டோக்களையே நம்பி உள்ளனர்.

கொடுங்கையூரில் இருந்து மூலக்கடை வரை இத்தகைய ஆட்டோக்கள் அதிகமாக ஓடுகின்றன. பெர்மிட் இல்லாத ஆட்டோக்களும், வாடகைக்கு இயக்க தகுதியற்ற தனியார் ஆட்டோக்களும் ஏராளம் ஓடுகின்றன.

மூலக்கடையில் இருந்து கொடுங்கையூர், பார்வதி நகருக்கு செல்ல அடிக்கடி பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.7 வீதம் 5 அல்லது 6 பேர் வரை ஏற்றிச் செல்கிறார்கள்.

பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களின் ஓட்டம் காலை முதல் இரவு வரை அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.., வி.எஸ்.பாபு விடம் அப்பகுதி மக்கள் பஸ் வசதியை அதிகரித்து தரும்படி கோரிக்கை வைத்தனர். சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையம், வண்டலூர், திருவான்மியூர், தியாகராய நகர் பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவரது முயற்சியால் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மூலக்கடை, பெரம்பூர், ஓட்டேரி, டவுட்டன், எழும்பூர் வழியாக திருவான்மியூர் சென்று வருகிறது. இந்த பஸ்களுக்கு அப்பகுதி மக்கள் இடையே அதிக வரவேற்புள்ளது. மேலும் சில வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள்.

இதே போல பாடிய நல்லூரில் இருந்து புதிய 5 வழித்தடங்களில் 10 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று முன் தினம் பாடிய நல்லூரில் நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்கள்.

பாடியநல்லூர்- பூந்த மல்லி (2 பஸ்கள்) பாடியநல்லூர்- தியாகராயநகர் (2), பாடியநல்லூர்- தாம்பரம் (2), பாடியநல்லூர்- கோயம் பேடு (2), கிண்டிக்கு (2) என 10 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சிவாஜி எம்.எல்.., முன்னாள் எம்.எல்.. கிருஷ்ணசாமி, திருவான்மியூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர

 

சென்னையில் மினி பஸ்: 3 மாதத்தில் தொடக்கம்: அமைச்சர் கே.என். நேரு

Print PDF

தினமணி 05.05.2010

சென்னையில் மினி பஸ்: 3 மாதத்தில் தொடக்கம்: அமைச்சர் கே.என். நேரு

சென்னை, மே. 4: சென்னை நகரில் மினிபஸ்களை இயக்கும் திட்டம் 3 மாதங்களில் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது குறித்து திமுக உறுப்பினர் வி.எஸ்.பாபு எழுப்பிய கேள்விக்கும், அவரைத் தொடர்ந்து, செங்கோட்டையன் (அதிமுக), ஞானசேகரன் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக) ஆகியோர் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கும் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்:

"சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸôர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாதந்தோறும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆட்டோக்கள் உரிமத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் அளிப்பதற்கான உத்தேசம் ஏதும் அரசிடம் இல்லை. ஷேர் ஆட்டோக்களை அனுமதித்தால் போக்குவரத்துக் கழக பஸ்கள் பாதிக்கப்படும்.

மினி பஸ்கள்: சென்னையின் குறுகிய சந்துகளில் இருந்து பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்ல மினி பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படும். இந்தத் திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார். பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்க, பெருநகர போக்குவரத்து ஆணையத்தை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக போக்குவரத்துத் துறை அமைச்சரும், தலைமைச் செயலாளர், மாநகர மேயர் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க நடப்பு கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும். 16 ஆண்டு காலத்துக்குள் ரூ. 88 ஆயிரத்து 200 கோடி அளவுக்கான திட்டங்களை இந்தக் குழு உருவாக்கி செயல்படுத்தும்.

மேம்பாலங்கள்-மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இதுவரை 19 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 25 இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 45 கி.மீ. நீளத்துக்கு பெருநகர ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

தியாகராய நகரிலும் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இடங்களிலும் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவு சாலை: தாம்பரம்-துறைமுகம் இடையே விரைவு சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தால், நகரின் பெரும்பகுதி நெரிசல் தவிர்க்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் குறித்து, தனது துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர், மாநகர காவல் துறை அதிகாரிகளுடன் மாதந்தோறும் துணை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், பெருநகரத்தின் சாலைகளில் தனி பாதையை அமைக்க நிதி தரும் நிலை இருந்தும், சென்னை நகரில் அதைச் செயல்படுத்த முடியவில்லை. அகலமான சாலையான அண்ணா சாலையில் மட்டும் அந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது' என்றார் கே.என்.

 


Page 34 of 57