தினமணி 01.06.2010
வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் படிப்பகம்: நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்
வாலாஜாபேட்டை, மே 31: ஆர்க்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் படிபகம் கட்டித் தர நகராட்சி முன்வர வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர் சுந்தரம் வலியுறுத்தினார்.
ஆர்க்காடு நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், சுந்தரம் மேற்கண்டவாறு பேசினார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:
19,20-வது வார்டுகளில் உள்ள சத்துணவுக் கூடங்களை அதிகாரிகள் சோதனையிட வேண்டும. குடிநீர் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும். கடைகளில் விளம்பரப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்றனர். நகர்மன்றத் துணைத் தலைவர் பொன்.ராஜசேகரன், உறுப்பினர்கள் நந்தகுமார், ராஜா, சுரேஷ், வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.