Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள்

Print PDF

தினமலர் 12.08.2010

குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள்

முதுகுளத்தூர்: ""முதுகுளத்தூர் பேரூராட்சி முதல் வார்டில் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, பேரூராட்சி சார்பில் இடம் கொடுத் தால், குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச வீடுகள் கட்டி தரப் படும்,''என, அமைச்சர் தங்கவேலன் கூறினார்.

முதுகுளத்தூரில் நடந்த விழாவில் பயனாளிக ளுக்கான இலவச "டிவி'க் களை வழங்கி அவர் பேசியதாவது: குடிசை மாற்று வாரியத்துறைக்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யபட்டு வருகிறது. இந்த நிதியால் குடிசை மாற்றுவாரிய வீடுகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு, தரமாக ரோடுகள் கூட அமைக்க முடியவில்லை. இதனால் குடிசை மாற்றுவாரியம் பணக்கார வீட்டில் கட்டி கொடுத்த ஏழைவீட்டு பெண் போல் உள்ளது. பெயருக்கு தான் அமைச்சர், துறை எல் லாம். இருப்பினும் மக்க ளின் சேவைக்காக தெருக் கள் தோறும் பணியாற்றி, குறைகளை களைந்து வருகிறேன், என்றார்.

முருகவேல்எம்.எல்,., முன்னிலை வகித்தார். தாசில்தார் பிச்சை வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திராமவன்னி, ஒன் றிய தலைவர்கள் ஈஸ்வரி (முதுகுளத்தூர்) , ராஜ சேகர் (கடலாடி) பேரூ ராட்சி தலைவர் சசிவர்ணம், துணைத் தலைவர் ஷாஜகான் , மாவட்ட தி.மு.., துணை செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட கவுன்சிலர் முத்து ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாரதா, சேகர், கணேசன், ஒன்றிய கவு ன்சிலர் திருமூர்த்தி, மாவட்ட காங்., செய லாளர் முனியசாமி உட் பட பலர் கலந்து கொண் டனர். செயல் அலுவலர் முனியாண்டி நன்றி கூறினார்.