தினகரன் 29.09.2010
குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் 167 பேருக்கு நிதியுதவி
நெல்லை, செப்.29: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 167 பயனாளிளுக்கு நேற்று நெல்லை மாநகராட்சியில் நிதியுதவி வழங்கப்பட்டது. தச்சை மண்டலத்தில் 33 பயனாளிகளுக்கும், பாளை மண்டலத்தில் 104 பயனாளிகளுக்கும், நெல்லை மண்டலத்தில் 30 பயனாளிகளுக்கும் புதிய வீடு கட்டி தரவும், வீடுகளை மேம்படுத்தவும் மானிய தொகையாக ரூ.26 லட்சத்து 92 ஆயிரம் வழங்கப்பட்டது.
மேயர் சுப்பிரமணியன் நிதியுதவியை அளித் தார். துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பை யன், மண்டல தலைவர் விஸ்வநாத பாண்டியன், கவுன்சிலர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண் டனர். மொத்தம் 167 பயனாளிகள் நிதியுதவிக்கான காசோலைகளை பெற்ற னர்.
நெல்லையில் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகையை மேயர் சுப்பிரமணியன் வழங்கினார். அருகில் துணைமேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர் விஸ்வநாதபாண்டியன், கமிஷனர் சுப்பையன்.