Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய வீடு கட்ட ரூ. 26 லட்சம் மானியம்

Print PDF

தினமணி 20.10.2010

புதிய வீடு கட்ட ரூ. 26 லட்சம் மானியம்

திருநெல்வேலி,அக்.19: திருநெல்வேலி மாநகர் பகுதியில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் 157 பேருக்கு ரூ. 26 லட்சம் மானியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேயர் அ.லெ. சுப்பிரமணியன் மானியத் தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தச்சநல்லூர் மண்டலத்தில் 58 பேர், பாளையங்கோட்டை மண்டலத்தில் 53 பேர், திருநெல்வேலி மண்டலத்தில் 40 பேர், மேலப்பாளையம் மண்டலத்தில் 6 பேர் என மொத்தம் 157 பேருக்கு ரூ. 26.39 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகளும், மாமன்ற உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்