Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமிரபரணி ஆற்றோர ஆக்ரமிப்பாளர்களுக்கு : 472 வீடுகள் "ரெடி'

Print PDF

தினமலர் 22.10.2010

தாமிரபரணி ஆற்றோர ஆக்ரமிப்பாளர்களுக்கு : 472 வீடுகள் "ரெடி'

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றோர ஆக்ரமிப்பாளர்களுக்கு வசதியாக சுத்தமல்லி, திருமால்நகரில் 472 வீடுகள் தயார் நிலையில் உள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஆற்றங்கரையோரங்களில் உள்ள ஆட்சேபணைக்குரிய ஆக்ரமிப்புகளை அகற்றப்பட உள்ளது. அவ்வாறு அகற்றும் பட்சத்தில் அங்கு வசித்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் குடியிருப்புகள் அமைக்க மத்திய அரசு 12வது நிதிக் குழு மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்ரமிப்புகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளாக சுத்தமல்லியில் 199 லட்சம் சதுர அடி பரப்பில் 1.20 லட்சத்தில் 166 மனையுடன் கூடிய தனி வீடுகளும், திருமால்நகரில் 787 லட்சம் சதுர அடி பரப்பில் 2.57 லட்சத்தில் 306 அடுக்கு மாடி குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும், இத்திட்ட பகுதியில் சாலை வசதி, மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆக்ரமிப்பில் வசித்து வந்தவர்களுக்கு கடந்த 13ம் தேதி குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.மாற்று குடியிருப்புதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இன்ஜினியர் ராஜசேகர் தெரிவித்தார்.