தினகரன் 02.11.2010
குறைந்த வட்டியில் வீட்டு கடன் பெற தேவர்சோலை பேரூராட்சி அழைப்பு
கூடலூர்
, நவ.2: தேவர் சோலை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பட்டா நில உரிமையாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கடன் பெற தேவர்சோலை பேரூராட்சியை அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஏழை
, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீட்டு வசதி திட்டம், இந்திரா ஆகாஷ் யோஜனா திட்டம், கச்சா வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.நகராட்சி
, பேரூராட்சி பகுதி ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி நகராட்சி, பேரூராட்சியில் வசிக்கும் ஏழை மக்கள் 250 சதுர அடியில் வீடு கட்ட ரூ.ஒரு லட்சமும், 400 சதுர அடியில் வீடு கட்ட ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் வட்டியில் மானியம் வழங்கும் கடனுதவி திட்டத்தை அரசு புதிதாக அறிவித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆதிவாசிகள்
, பழங்குடியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற முடியும். திட்டத்தில் பயன் பெற விரும்பும் நபர்கள் பேரூராட்சி, நகராட்சிகளில் விண்ணப்பம் பெற்று ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, பட்டா, வருவாய் சான்று ஆகிய நகல்களுடன் தங்கள் புகைப்படத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒவ்வொரு வாரமும் கோவையிலுள்ள வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளரிடம் ஒப்படைக்கப்படும்
. அங்கு அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து அந்தந்த பகுதி வங்கிகளுக்கு பரிந்துரை செய்வர். நீண்ட கால தவணையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை கடன்களை குறைந்த மாத தொகையில் திருப்பி செலுத்தலாம்.இதற்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்க இருப்பதால் பயனாளிகளுக்கு குறைந்த வட்டியில் வீட்டு கடன் கிடைக்கும்
. தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பட்டா நில உரிமையாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கடன் பெற தேவர்சோலை பேரூராட்சியை அணுகலாம் என்று செயல் அலுவலர் ராஜ கோபால், தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளனர்.