Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் புளியங்குடி நகராட்சியில் இன்று சிறப்பு முகாம்

Print PDF

தினகரன்              02.11.2010

வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் புளியங்குடி நகராட்சியில் இன்று சிறப்பு முகாம்

புளியங்குடி,நவ.2: புளியங்குடி நகராட்சிப்பகுதியில் வீடு கட்டுவதற்கான கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் வழங்காதவர்கள் இன்று (2ம் தேதி) நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறப்புமுகாமில் பங்கேற்குமாறு ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து புளியங்குடி நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புளியங்குடி நகராட்சி பகுதியில் மத்திய அரசின் நகர்ப்புற வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக கடந்தமாதம் 5ந் தேதி புளியங்குடியில் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்விண்ணப்பங்களில் பெரும்பாலானவை புகைப்படம் ஒட்டப்படாமலும், கையொப்பம் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இணைக்கப்படாமலும் உள்ளன.

இதுதொடர்பாக இன்று நகராட்சி அலுவலகத்தில் சிறப்புமுகாம் நடைபெறுகிறது.

காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நடக் கும் இம்முகாமில் சிவகிரி தாசில்தார் ராஜாராம், சார்பதிவாளர் (பொறுப்பு) கணேசன்ஆகியோர் பங் கேற்கின்றனர். எனவே, வீடு கட்ட கடன் கேட்டு விண்ணப்பத்துள்ளவர்கள் போ திய ஆவணங்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம்