Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

9 பேரூராட்சிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் 225 குடிசைகள் மேம்பாடு

Print PDF
தினமணி 11.12.2009

9 பேரூராட்சிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் 225 குடிசைகள் மேம்பாடு

திருப்பூர், டிச.10: தேசிய குடிசைப்பகுதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 9 பேரூராட்சிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் 225 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மேம்படுத்தப்பட உள்ளன. பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள் மேம்பாட்டுக்காக தேசிய குடிசைப்பகுதி புனரமைப்பு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா 25 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மேம்படுத்தித்தரப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிóக்கப்பட்டது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளில் இந்த ஆண்டு அவிநாசி, கொளத்துப்பாளையம், குன்னத்தூர், மூலனூர், மடத்துக்குளம், முத்தூர், சங்கராமநல்லூர், சின்னக்காம்பாளையம் மற்றும் கொமரலிங்கம் ஆகிய 9 பேரூராட்சி களில் தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் 225 குடிசை வீடுகள் ரூ.2.60 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

தவிர, அக்குடிசைகள் அமைந்துள்ள பகுதிகளில் ரூ.2.70 கோடி மதிப்பில் சாலை, கழிப்பிடம், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட அவசியமான 72 அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவும் உள்ளன. இத்திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வேண்டி திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு ள்ளன. இதற்கான உத்தரவு கிடைத்தவுடன் 9 பேரூராட்சிகளிலும் பணிகள் மேற்கொ ள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.