Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு பணி உத்தரவு துணை மேயர் கார்த்திக் வழங்கினார்

Print PDF

மாலை மலர் 21.12.2009

குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தில் 45 பயனாளிகளுக்கு பணி உத்தரவு துணை மேயர் கார்த்திக் வழங்கினார்

கோவை மாநகர் பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு பணி உத்தரவை துணை மேயர் கார்த்திக் வழங்கினார்.

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சி 15-வது வார்டில் சொசைட்டி ஹாலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.

முகாமின் போது, 45 பய னாளிகள் தேர்வு செய்யப் பட்டனர். பின்னர் 45 பேருக் கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்குவதற்கான பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 15-வது வட்டத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துணை மேயர் நா.கார்த்திக் கலந்து கொண்டு 45 பயனாளிகளுக்கும் பணி உத்தரவை வழங்கினார்.

அப்போது கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம். சாமி, கவுன்சிலர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் போர்வாள் ராஜேந்திரன், இன்னாசி, கோபால்சாமி, ரத்தினம், மரிய ஜோசப், மாநகராட்சி உதவி பொறியாளர் ஹேமலதா, தொழில் நுட்ப உதவி யாளர் தியாகராஜன் மற்றும் 15-வது வட்ட தி.மு.. பிரமு கர்கள், தொண்டர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் திரளானபேர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 21 December 2009 11:25