தினமலர் 30.12.2009
குடிசை மாற்று வீடுகள்: பணியை துரிதமாக்க உத்தரவு
கோவை : ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அம்மன் குளம் பகுதியில் கட்டப்படும் வீடுகளை, ஊரகதொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் நேற்று பார்வையிட்டார்.கோவை, அம்மன் குளம் பகுதியில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 29.43 கோடி மதிப்பீட்டில் 936 வீடுகள், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படுகின்றன.
கட்டட பணிகளை நேற்று நேரில் பார்வையிட்ட ஊரகதொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பழனிசாமி, கட்டடங்கள் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளதா, குடிநீர், மின்சாரம், தார்சாலை, சாக்கடை கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் சரிவர செய்யப் படுகிறதா, என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.அம்மன் குளம், ஏரிமேடு, வாலாங்குளம் போன்ற பகுதியில் வசிக்கும் குடிசை வாசிகள் இங்கு குடியமர்த்தப்பட உள்ளனர். உலகத்தமிழ் மாநாடு நெருங்கு வதையொட்டி பணிகளை விரைவு படுத்தி, 2010, ஜூனுக்குள் பணி களை முடிக்க வேண்டும், என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.முன்னாள் எம்.பி., ராமநாதன், குடிசை மாற்று வாரிய உதவி செயற் பொறியாளர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.