தினமணி 31.12.2009
குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் ஆய்வு
கோவை, டிச. 29: குடிசைவாசிகளுக்காக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் ரூ.29.43 கோடியில் 936 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படுகிறது. அம்மன்குளம் ஏரிமேடு, வாலாங்குளம் பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.
குடிநீர், மின்வசதி, சாலை, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் பழனிசாமி, வரும் ஜூன் மாதத்துக்கு முன்பு அனைத்து பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். முன்னாள் எம்பி மு.ராமநாதன், குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.