தினமணி 04.01.2010
குடிசைவாழ் மக்கள் சங்க கூட்டம்
பெங்களூர், ஜன.3: கர்நாடக மாநில குடிசைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பெங்களூர் மாவட்ட நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் சங்கக் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை நடக்கிறது.
இந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி. அங்கய்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநிலத்தின் 14 மாவட்டங்களில் உள்ள குடிசைவாழ் மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், உரிமை, சமூகநீதி, சுயமரியாதை போன்றவற்றுக்காகவும் இந்த சங்கம் போராடி வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் நகர்ப்புற மாவட்ட குடிசைவாழ் மக்களின் கூட்டம் இன்ஃபான்டரி சாலையில் உள்ள இன்ஃபான்டரி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் கூட்டம் துவங்குகிறது.
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள தேசியத் தலைவருமான எச்.டி.தேவகெüடா கூட்டத்தை துவக்கிவைக்கிறார்.
மக்களவை உறுப்பினரும் ம.ஜ.தள மாநிலத் தலைவருமான எச்.டி.குமாரசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சட்டப்பேரவை ம.ஜ.தள தலைவர் எச்.டி.ரேவண்ணா, ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.