Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மேம்பாட்டு திட்டத்தில்121 பேருக்கு ரூ.28 லட்சம் நிதி: மாநகராட்சி மேயர் வழங்கல்

Print PDF

தினமலர் 12.01.2010

குடிசை மேம்பாட்டு திட்டத்தில்121 பேருக்கு ரூ.28 லட்சம் நிதி: மாநகராட்சி மேயர் வழங்கல்

திருநெல்வேலி:ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேப்பாட்டு திட்டத்தின் கீழ் 121 பயனாளிகளுக்கு 27.69 லட்சம் செக்குகளை மேயர் வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 121 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 69 ஆயிரத்தை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.நெல்லை மாநகராட்சியில் பணியில் இருக்கும் போது இறந்த 2 பயனாளிகளின் வாரிசுகளுக்கு முறையே ரூ.1.50 லட்சம் வீதம் 2 செக்குகளை மேயர் வழங்கினார்.இதில் மண்டல சேர்மன் விஸ்வநாதன், சுப.சீதாராமன், எஸ்.எஸ்.முகம்மதுமைதீன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:34