தினமணி 03.02.2010
வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு
புதுச்சேரி, பிப். 2: புதுச்சேரியில் வீட்டுவசதி வாரிய அடுக்கு மாடி வீடுகளுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி வாரியச் செயலர் செ.குப்புசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:
புதுச்சேரி வீட்டு வசதி வாரியம், சாரம் வருவாய் கிராமம், சுதந்திர பொன்விழா நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள, ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி வீடுகளுக்கான தோராய விலை ரூ.15,25,000 என்று அறிவித்து விற்பனைக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்பட்டு 25-11-2010-ல் குலுக்கல் முறையில் பலருக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டது.இந்நிலையில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வீóட்டின் விலை அதிகமாக இருக்கிறது என்றும், அதை மறு பரிசீலனை செய்து, விலையை குறைத்து கொடுக்க புதுவை வீட்டு வசதி வாரியத் தலைவரை கேட்டுக்கொண்டனர்.வாரியத் தலைவரின் ஆணைப்படி, ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி வீட்டிற்கான தோராய விலை ரூ.10,34,700 என அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அடுக்குமாடி வீடு வாங்க விருப்பமுள்ளவர்கள் வீட்டு வசதி வாரியத்தை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.