தினமணி 04.02.2010
மதுரை வீட்டு வசதிப் பிரிவு அதிகாரி அறிவிப்பு
மதுரை, பிப். 3: மதுரை வீட்டு வசதிப் பிரிவில் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்திய அனைத்து ஒதுக்கீடுதாரர்களும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வரும் 28.02.2010}குள் கிரயப் பத்திரம் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் மதுரை வீட்டு வசதிப் பிரிவு அறைக்கு அனுப்பிவைக்கப்படும்.
இதனால், ஏற்படும் நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்க, மேலே குறிப்பிட்ட தேதிக்குள் மதுரை வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை தொடர்புகொண்டு கிரயப் பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பி.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.