தினமலர் 09.02.2010
குடிசை மேம்பாட்டு திட்டம் பணி ஆணை வழங்கல்
கரூர்: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிக்கான பணி ஆணை கரூர் நகராட்சியில் வழங்கப்பட்டது. தலைவர் சிவகாமசுந்தரி பயனாளிகளுக்கு இதற்கான ஆணையை வழங்கினார். நகராட்சி கமிஷனர்(பொ) ராஜா, கவுன்சிலர் ராமசாமி, சமுதாய அமைப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர். திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து ஏழாயிரம் மதிப்பீட்டில் பயனாளிகள் வீடு கட்டிக்கொள்ள மத்திய, மாநில அரசு மானியத்தொகையாக 77 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மீதமுள்ள தொகையை பயனாளியே ஈடு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்படும் வடிவமைப்பு மற்றும் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய வீடு அமைய வேண்டும். பணி ஆணை கிடைத்த 15 நாட்களில் பணி துவங்கப்பட வேண்டும். தினசரி பணி நிலவரம் நகராட்சிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மூன்று மாதங்களில் பணி முடிக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.