Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 602 வீடுகளை இடிக்க அதிரடி முடிவு : ரூ.6.60 கோடியில் பழைய வீடுகள் சீரமைப்பு

Print PDF

தினமலர் 11.03.2010

கோவையில் 602 வீடுகளை இடிக்க அதிரடி முடிவு : ரூ.6.60 கோடியில் பழைய வீடுகள் சீரமைப்பு

கோவை : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவையிலுள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்புகளைச் சீரமைக்க 6 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை பிரிவுக்குச் சொந்தமாக, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3,410 வாடகைக் குடியிருப்புகள் உள்ளன. ,பி,சி,டி மற்றும் "' என 5 வகையான வீடுகள் தனித்தனியாகக் கட்டப்பட்டு, அரசு அலுவலர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

கோவை நகரில் ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி உட்பட பல இடங்களில் 2,508 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் பெரும்பாலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டவை. வீடுகளைப் பராமரிக்க ஆண்டுதோறும் தரப்படும் நிதி, யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது.

வீடுகளில் வசிக்கும் அரசு அலுவலர்களே, அவரவர் வீடுகளின் உட்புறத்தில் மட்டும் தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வர். வெளிப்புறத்தில், எந்த சீரமைப்புப் பணியும் நடப்பதே இல்லை. இதனால், பெரும்பாலான குடியிருப்புகள் இடிந்து, சிதிலமடைந்து, குடியிருக்க லாயக்கற்றதாகி விட்டன. பல குடியிருப்புகளில் முற்றிலுமாக ஆட்கள் இல்லாமல் காலியாகவுள்ளன. பல கட்டடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழத் தயாராகவுள்ளன. உக்கடத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்து 13 பேர் பலியான பின்பே, மற்ற குடியிருப்புகள் அனைத்தும் இடிக்கப் பட்டன.

கிட்டத்தட்ட இந்த குடியிருப்புகளின் நிலையும் இதே என்றாலும், இவற்றை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அரசு அலுவலர் குடியிருப்புகளை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று அலுவலர்கள் மத்தியில் குமுறல் இருந்தது. இது தொடர்பாக, "தினமலர்'நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.இந்த வீடுகளில் மோசமான நிலையில் உள்ள வீடுகளை இடிக்கவும், மற்ற வீடுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இடிக்கப்பட வேண்டிய வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதலில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான வீடுகள் இடிக்கப்படவுள்ளன.

தாமஸ் பார்க் பகுதியில் 222, டி.எப்..,குடியிருப்பில் 108, காந்திபுரத்தில் 8, உப்பிலிப்பாளையத்தில் 192, சீரநாயக்கன்பாளையத்தில் 54, கவுண்டம் பாளையத்தில் 18 என மொத்தம் 602 வீடுகளை இடிக்க வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

இவற்றை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய வீடுகள் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். அதற்கு முன்பாக, மற்ற வீடுகளைச் சீரமைக்க, வாரியம் முடிவு செய்து, 6 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

ரேஸ்கோர்ஸ் பகுதி வீடுகளைச் சீரமைக்க ஒரு கோடியே 70 லட்ச ரூபாயும், சிங்காநல்லூரில் 234 வீடுகளைச் சீரமைக்க 86 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஒப்புதலும், நிதியும் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்குமென்று வீட்டு வசதி வாரிய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தொகையில், அரசு அலுவலர் குடியிருப்புகளின் உள்ளும், புறமும் சீரமைக்கப்படும்; குடிநீர், உப்பு நீருக்கு தனித்தனி சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்படும். இதனால், அரசு அலுவலர் குடியிருப்புகள் புதுப்பொலிவு பெறும் என்பதால் அரசு அலுவலர்கள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.சபாஷ் கலெக்டர்! அரசு அலுவலர்களின் அவலம் பற்றி, இதற்கு முன்பாக இருந்த பல கலெக்டர்களிடமும் ஏராளமான மனுக்கள் தரப்பட்டுள்ளன; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அரசு எடுத்துள்ள முடிவுக்கு, கலெக்டர் உமாநாத்தின் முயற்சியும் முக்கியக் காரணம். இதற்காக முழு முயற்சி எடுத்த அவர், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் சிதிலமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, அப்பகுதி பெண்கள் கூறுகையில், " இந்த அம்மன் கோவிலில் மகளிர் நல மருத்துவமனைக்கு வருவோர் நலம் பெற வேண்டிக் கொள்வார்கள். வேண்டுதலும் நிறைவேறி வந்தது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்மன் கோவில் இடிக்கப்பட்டது. மருத்துவமனை விரிவாகத்திற்காக அம்மன் கோவில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், விரிவாக்கம் செய் யப்பட்ட பின் அந்த வளாகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மீண்டும் சிறிய அளவிலாவது அம்மன் கோவில் அமைக்க வேண்டும்,' என்றனர். அதேபோல, சாலை விரிவாக் கத்திற்காக புளியந்தோப்பு நெடுஞ் சாலை முகப்பில் இருந்த போலீஸ் பூத் மற்றும் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. நேற்று முன் தினம் புதுவண்ணாரப்பேட்டை, இளைய முதலித் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக பா...,வினரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உடற்பயிற்சி மையம் உள் ளிட்ட குடிசைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Thursday, 11 March 2010 05:55