தினமலர் 12.03.2010
ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில்176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் வழங்கல்
நெல்லை மண்டலத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 500, தச்சநல்லூர் மண்டலத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 89 ஆயிரமும், பாளை., மண்டலத்தில் 65 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 74 ஆயிரமும், மேலப்பாளையம் மண்டலத்தில் 7 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 9 ஆயிரத்து 500க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் மாநகராட்சி துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன், மேலப்பாளையம் மண்டல தலைவர் எஸ்.எஸ்.முகம்மது மைதீன், மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.