Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில்176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் வழங்கல்

Print PDF

தினமலர் 12.03.2010

ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில்176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சம் வழங்கல்

திருநெல்வேலி:ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் வாழும் 176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 9 ஆயிரத்து 500க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.

நெல்லை மண்டலத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 500, தச்சநல்லூர் மண்டலத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 89 ஆயிரமும், பாளை., மண்டலத்தில் 65 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 74 ஆயிரமும், மேலப்பாளையம் மண்டலத்தில் 7 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 176 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 9 ஆயிரத்து 500க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் மாநகராட்சி துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன், மேலப்பாளையம் மண்டல தலைவர் எஸ்.எஸ்.முகம்மது மைதீன், மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:32