Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் 251 பேருக்கு ரூ.54.75 லட்சம் குடிசை மேம்பாட்டு நிதி: மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்

Print PDF

தினமலர் 31.03.2010

நெல்லை மாநகராட்சியில் 251 பேருக்கு ரூ.54.75 லட்சம் குடிசை மேம்பாட்டு நிதி: மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் 251 பேருக்கு குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 54.75 லட்சம் நிதியுதவியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய குடிசை மாற்றுவாரிய குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 251 பேருக்கு 54.75 லட்ச ரூபாய்க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் நெல்லை மண்டலத்தில் 45 பேருக்கும், தச்சை மண்டலத்தில் 91 பேருக்கும், பாளை., மண்டலத்தில் 97 பேருக்கும், மேலப்பாளையம் மண்டலத்தில் 15 பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.

Last Updated on Wednesday, 31 March 2010 06:18