தினமணி 07.04.2010
21 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு
புதுச்சேரி, ஏப். 6: ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.21.5 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டு வசதி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கூறினார்.
÷சட்டப்பேரவையில் அவரது அறிவிப்பு: புதுச்சேரி பகுதியில் உள்ள ஜவஹர்
நகர், பூமியான்பேட்டையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி இம் மாதம் தொடங்கப்பட உள்ளது.
÷புதுச்சேரி பகுதியில் உள்ள கொம்பாக்கம், ஒதியம்பட்டு பகுதியில் ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் முறையே 128 மற்றும் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி பகுதியில் உள்ள சண்முகா நகரில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் 150 தனி நபர் குடியிருப்புகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.