தினமலர் 13.04.2010
வாரிசுகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்?
சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீட்டாளர் மறைவுக்குப் பின், அவரது வாரிசுகளுக்கு பெயர் மாற்றித் தர வேண்டுமென, சென்னை சி.ஐ.டி., நகர் மாதிரி வீடுகள் குடியிருப் போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகை குடி யிருப்போர் நலச் சங்கத்தின் பேரவைக் கூட்டம், சென்னையில் நடந்தது. சங்கத் தலைவர் பெல்லியப்பா, துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலர் சுந்தரராஜன், பொருளாளர் சாய்குமாரி மோகன் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகளின் கட்டணத்தை 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சி.ஐ.டி., நகர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் தங்களுக்கு வீடுகளை சொந்தமாக்கித் தர வேண்டும், ஒதுக்கீட்டாளர் மறைவுக்குப் பின், சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு வீடுகளை தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.