தினமணி 26.04.2010
அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பு பற்றிய வெள்ளை அறிக்கை தேவை
கோவை, ஏப். 25: கோவை-அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, கொங்குநாடு மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
÷இது குறித்து கட்சியின் கோவை மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் அண்மையில் விடுத்த அறிக்கை:
÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், அம்மன்குளத்தில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தின் இரு பிரிவுகள் ஒரு புறமாக பூமிக்குள் புதைந்து சரிந்தன.
÷இந்த கட்டடம் கட்டப்பட்ட இடம் அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கான இடம் அல்ல. சரியான, தெளிவான ஆய்வுக்குப்பின் இக்கட்டடம் கட்டப்படவில்லை. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
÷இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பை முழுமையாக இடிக்க வேண்டும். இக்குடியிருப்பு தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்று தெரிவித்துள்ளார்.