Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

நெல்லை மாநகராட்சியில் 251 பேருக்கு ரூ.54.75 லட்சம் குடிசை மேம்பாட்டு நிதி: மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்

Print PDF

தினமலர் 31.03.2010

நெல்லை மாநகராட்சியில் 251 பேருக்கு ரூ.54.75 லட்சம் குடிசை மேம்பாட்டு நிதி: மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் 251 பேருக்கு குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 54.75 லட்சம் நிதியுதவியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய குடிசை மாற்றுவாரிய குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 251 பேருக்கு 54.75 லட்ச ரூபாய்க்கான செக்குகளை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் நெல்லை மண்டலத்தில் 45 பேருக்கும், தச்சை மண்டலத்தில் 91 பேருக்கும், பாளை., மண்டலத்தில் 97 பேருக்கும், மேலப்பாளையம் மண்டலத்தில் 15 பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.

Last Updated on Wednesday, 31 March 2010 06:18
 

குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.5 கோடியில் 580 வீடுகள்

Print PDF

தினமலர் 27.03.2010

குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.5 கோடியில் 580 வீடுகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்ட பயனாளிகளுக்கான ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்து பேசுகையில்,தஞ்சை மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதில் பெரம்பலூர் நகராட்சி முன்னிலை வகிக்கிறது.

மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 6.5 கோடி மதிப்பில் 580 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, வீடு கட்டுவதற்கான வரைப்பட அனுமதி ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் அவர்களுக்கு மிக குறைந்த 4 சதவீத வட்டியில் ரூ. 20ஆயிரம் கடன் வழங்கப்படும் என்றார். பின்னர், குறிப்பட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டிமுடித்த பயனாளிகளுக்கு சிறப்பு பரிசுகளை நகராட்சி தலைவர் ராஜா வழங்கினார்.முகாமில் தஞ்சை மண்டல திட்ட அலுவலர் சுவாமிநாதன், உதவி பொறியாளர் கவிதா, நகராட்சி துணைத் தலைவர் முகுந்தன், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்றார். முடிவில் நகராட்சி பொறியாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Last Updated on Saturday, 27 March 2010 06:13
 

குடிசை மேம்பாட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி 26.03.2010

குடிசை மேம்பாட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர்
, மார்ச் 25: பெரம்பலூரில் நகராட்சி சார்பில், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், இந்தத் திட்டத்தில் விரைவாக வீடுகளைக் கட்டி முடித்த பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா பேசியது:

தஞ்சை மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதில் பெரம்பலூர் நகராட்சி முன்னிலை வகிக்கிறது. ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் 580 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, புதைச் சாக்கடை இணைப்பு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.25 ஆயிரம் கடன் வசதி வழங்கப்படும் என்றார் அவர். முகாமில், தஞ்சை மண்டல திட்ட அலுவலர் சுவாமிநாதன், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் கி. முகுந்தன், தஞ்சை மண்டல உதவிப் பொறியாளர் கவிதா, நகராட்சி உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், ஜெயக்குமார், கே.ஜி. மாரிக்கண்ணன், தாண்டாயி, கண்ணகி, ஈஸ்வரி, பொற்கொடி ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் வரவேற்றார். நிறைவில், நகராட்சிப் பொறியாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Last Updated on Friday, 26 March 2010 06:47
 


Page 43 of 69