Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

சென்னையில் 1370 பேருக்கு இலவச கான்கிரீட் வீடுகள்

Print PDF

தினகரன் 29.12.2009

சென்னையில் 1370 பேருக்கு இலவச கான்கிரீட் வீடுகள்

ஆலந்தூர் : சென்னையில் 1,370 பேருக்கு ரூ.18 கோடியில் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி 140&வது வட்டத்தில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், இலவச கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடக்க விழா கிண்டியில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து, திட்டத்தை தொடங்கி வைத்தார். மண்டல துணை ஆணையர் பிரேம்நாத், முன்னாள் கவுன்சிலர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

140&வது வார்டுக்கு உட்பட்ட 24 பேருக்கு தலா ரூ.1.3 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீடு கட்டும் திட்டத்துக்கான உத்தரவை வழங்கி மேயர் பேசியதாவது:

ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகாமல் தடுக்க சென்னையில் உள்ள 22 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு கால்வாய் கட்டும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் 1370 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான உத்தரவு இன்று முதல் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.18 கோடியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி தந்துள்ளன. ஒரு வீட்டுக்கு ரூ.1.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.

விழாவில் 140&வது வட்ட முன்னாள் கவுன்சிலர் தாமோதரன், வட்ட செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வம், ஆதிமூலம், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொள்ள ரூ. 17.81 கோடி ஒதுக்கீடு: மேயர்

Print PDF

தினமணி 29.12.2009

குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொள்ள ரூ. 17.81 கோடி ஒதுக்கீடு: மேயர்

சென்னை மாநகரை குடிசை இல்லா நகராக்கும் வகையில் குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டுவதற்கான ஆணையை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கினார் மேயர்.

சென்னை, டிச. 28: சென்னையில் உள்ள குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொள்வதற்கு 370 பயனாளிகளுக்கு ரூ. 17.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணி செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்து ஒதுக்கீடு ஆணைகள் வழங்குதல் மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் பணி சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரிமா சங்க பள்ளியில் திங்கள்கிழமை (டிச. 28) நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மேயர் மா. சுப்பிரணியன் பேசியது:

சென்னை நகரில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் புதிய குடியிருப்புகள் கட்டிக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. குடிசை இல்லாத சென்னையை உருவாக்கும் வகையில் சென்னையில் 44 குடிசைப் பகுதிகளில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய புதிய வீடுகள் கட்டித்தர 17.10.2007 அன்று நடந்த மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 236 குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்த கூட்டம் அனுமதியளித்திருந்தது. குடியிருப்பு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வீடும் 330 சதுர அடி பரப்பளவில் ரூ. 1.30 லட்சம் மதிப்பீட்டில், 1370 வீடுகள் ரூ. 17.81 கோடியில் கட்டித்தரப்பட உள்ளன.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆகும் ரூ.1.30 லட்சம் செலவில் 10 சதவீத பங்கான ரூ. 13 ஆயிரத்தை பயனாளிகள் ஏற்க வேண்டும். 50 சதவீத பங்கான ரூ. 65 ஆயிரத்தை மத்திய அரசும், 40 சதவீத பங்கான ரூ. 52 ஆயிரத்தை தமிழக அரசும் மானியமாக வழங்கும்.

இந்த திட்டத்தின்படி வீடுகள் கட்ட, பயனாளிகள் இடத்துக்கான பத்திரம் மற்றும் பட்டா வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் அந்த பகுதியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் 734 நபர்களுக்கு வீடுகள் கட்ட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படுகிறது.

பயனாளிகள் குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் குறைந்தபட்சம் 300 சதுரஅடி கட்டடம் கட்ட தேவையான மனை அளவுடன் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவைகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு மண்டலக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.

கட்டடப் பணியை நான்கு கட்டமாக ஆய்வு செய்து பயனாளிகளுக்கு முழுத் தொகையும் வழங்கப்படும் என்றார் மேயர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் தாமோதரன், மண்டல அலுவலர் பிரேம்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நகர்புற நலிவடைந்த பிரிவினருக்கு வட்டி மானியத்தில் வீடு கட்ட கடன்

Print PDF

தினமலர் 23.12.2009

நகர்புற நலிவடைந்த பிரிவினருக்கு வட்டி மானியத்தில் வீடு கட்ட கடன்

விழுப்புரம்:நகர்புறம் மற்றும் பேரூ ராட்சி பகுதிகளைச் சேர்ந்த நலிவடைந்த பிரிவினருக்கு அரசு சார்பில் வட்டி மானியத்தில் வீடு கட்ட வங்கி கடன் வழங் கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதியில் குறைந்த வருவாய் பெற்று பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள வங் கிகள் மூலம் வட்டி மானியத்தில் கடன் வழங்கப்படுகின்றன.நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மாத வருமானம் 3,300 ரூபாய் வரையுள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாத வருமானம் 3,301 முதல் 7,300 ரூபாய் வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிக பட்சமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங் கப்படுகிறது.

இதில் மத்திய அரசின் மானியம் அதிகபடியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதமும், அதற்கு மேல் உள்ள தொகைக்கு வங்கி நிர்ணயம் செய்யும் தொகை யும் செலுத்த வேண்டும்.விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகரப் பகுதிகள், 15 பேரூராட் சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக வீட்டுமனைப் பட்டா இருந்தால் செயற் பொறியாளர் மற்றும் நிர் வாக அதிகாரி, தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், விழுப்புரம் என்ற முகவரியிலும், 04146-249606 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக் டர் தெரிவித்துள்ளார்.

 


Page 54 of 69