தினமலர் 29.09.2010
குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில்பயனாளிகளுக்கு ரூ.26.92 லட்சம் நிதி:மேயர் ஏ.எல்.எஸ்., வழங்கல்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 167 பயனாளிகளுக்கு ரூ.26.92 லட்சத்தினை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.நெல்லை மாநகராட்சி ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தச்சநல்லூர் மண்டலத்தில் 33 பயனாளிகள், பாளை., மண்டலத்தில் 104 பயனாளிகள், நெல்லை மண்டலத்தில் 30 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு மேம்பாட்டு பணிகளுக்காகவும் மானியத் தொகை ரூ.26.92 லட்சத்தினை பயனாளிகளுக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன், மண்டல சேர்மன் விஸ்வநாதன், கவுன்சிலர்கள் வெங்கடேசன், நமச்சிவாயம், துரை, அப்துல்வகாப், கோபி, பேபிகோபால், உதவிக்கமிஷனர் சுல்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்