Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு

Print PDF

தினகரன் 06.09.2010

கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு

வேலூர், செப்.6: காட்பாடி ஊராட்சி ஒன்றியம் லத்தேரி, கரசமங்கலம் ஊராட்சிகளில் இலவச சமையல் காஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. கரசமங்கலத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் பிரமிளா தயாநிதி தலைமை தாங்கினார்.

மாவட்ட கவுன்சிலர் ஏ.பி.நந்தகுமார், தாசில்தார் ரேணு, வட்ட வழங்கல் அலுவலர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 528 பயனாளிகளுக்கு இலவச சமையல் காஸ் அடுப்பு, முதியோர் உதவித்தொகை, 48 பெண்களுக்கு திருமண நிதியுதவி, திருநங்கைகள் 2 பேருக்கு தையல் இயந்திரம் என மொத்தம்

ரூ12 லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

தற்போது கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள குடிசைகளுக்கு கிடையாது என்று உள்ளது. இதற்காக துணை முதல்வர் ஸ்டாலினிடம் பேசியுள்ளேன். இப்போது மாநகராட்சி, நகராட்சி எல்லைகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

ஆகவே, மாநகராட்சி எல்லையில் சேருவதால் நமக்கு வீடு கிடைக்காது என்று யாரும் எண்ண வேண்டாம். அதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர்களும் நமது ஊர்தான் மாநகராட்சியில் சேருகிறதே என்று எந்த பணியும் செய்யாமல் இருக்கக்கூடாது.

காட்பாடி ஒன்றியம் நிச்சயம் மாநகராட்சி எல்லைக்குள் வராது. எனவே, ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதிகளில் தெரு விளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இதை அடுத்த வாரம் முதல் தினமும் 5 ஊராட்சிகள் வீதம் கண்காணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எம்எல்ஏ காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஷீலாராஜன், தாராபடவேடு நகராட்சித் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் எம்பி முகமது சகி, வட்டார கல்விக்குழு தலைவர் தயாநிதி உட்பட பலர் வாழ்த்தி பேசினர். ஊராட்சி துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

 

சேரிவாசிகள் எண்ணிக்கை 9.30 கோடியாக உயரும்

Print PDF

தினகரன் 06.09.2010

சேரிவாசிகள் எண்ணிக்கை 9.30 கோடியாக உயரும்

புதுடில்லி, செப். 6: இந்தியாவில் நகர்ப்புற குடிசைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2011ல் 9 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாட்டில் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் பற்றிய கணக்கெடுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டு வருகிறது. ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடிசைகள் இல்லா இந்தியா உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் நகர்ப்புற குடிசைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2011ல் ஒன்பது கோடியே 30 லட்சமாக உயரும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய திட்டக் கமிஷனுக்கான தலைமை ஆலோசகரும், புள்ளியல் துறை முன்னாள் தலைவருமான பிரணாப் சென் கூறுகையில், ‘கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் தொகை 2011ல் ஏழு கோடியே 60 லட்சமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நவீன கணக்கெடுப்பின்படி ஒன்பது கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் ஐந்து கோடியே 20 லட்சமாக இருந்ததுஎன்று தெரிவித்துள்ளார்.

புதிய கணக்கெடுப்பின்படி 2011ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு கோடியே 81 லட்சம், டெல்லியில் 31.63 லட்சம், உத்தரப்பிரதேசத்தில் 1.87 கோடி, தமிழகத்தில் 86.44 லட்சம், மேற்குவங்கத்தில் 85.46 லட்சம், ஆந்திராவில் 81.88 லட்சம் பேரும் வசிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.

குடிசைப்பகுதி வாழ் மக்கள் அதிகரிப்பை அமோதித்து மத்திய குடிசைவாழ் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா கூறுகையில், ‘திடீர் நகர்ப்புற வளர்ச்சியால் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் குடிசைப்பகுதி வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கை குறையும். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இதை அடைய முடியும்என்றார்.

இதற்கு முந்தைய கணக்கெடுப்பின்படி கொத்தாக 60 குடிசைவாழ் வீடுகளுக்கு மேற்கூரை இல்லை அல்லது காங்கிரீட் கூரை இல்லை, குடிநீர் இல்லை, கழிவறை, கழிவுநீர் வசதியில்லை என்று இருந்தது. இது தற்போது 20 முதல் 25 வீடுகளுக்கு என்று குறைந்துள்ளது.

 

ரூ.55.74 கோடியில் 7,432 வீடுகள்:மாவட்டம் முழுவதும் கட்ட முடிவு

Print PDF

தினமலர் 03.09.2010

ரூ.55.74 கோடியில் 7,432 வீடுகள்:மாவட்டம் முழுவதும் கட்ட முடிவு

திருப்பூர்:""திருப்பூர் மாவட்ட அளவில், 55.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் 4,258 வீடுகள், இலவச கான்கிரீட் வீடு திட்டத்தில் 3,174 வீடுகள் கட்டப்பட உள்ளன,'' என்று திட்ட அலுவலர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மூலமாக, திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 181 குடிசைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதில், திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு 7,522 குடிசைகள் கான்கிரீட் வீடு திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன. மீதியுள்ள குடிசைகளில் 3,692 குடிசைகள் நிபந்தனையுடன் தகுதியானவை என்றும், 3,967 குடிசைகள் தகுதியற்றவை என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த 7,522 குடிசைகளில், நடப்பு நிதியாண்டில் 3,174 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படுகின்றன. அதற்கான 25 சதவீத நிதியாக, நான்கு கோடியே 89 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 56 மூட்டை சிமென்ட், கம்பிகள் மற்றும் ஜன்னல், கதவுகள், கழிப்பறைக்கு தேவையான "பேஸ்-இன்'கள், அந்தந்த ஒன்றியங்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கான்கிரீட் வீடு திட்ட பணி, கடந்த ஆகஸ்ட் 15 முதல் துவங்கியுள்ளது. மானியத்தொகையில், ஒவ்வொரு காலாண்டுக்கும், கட்டுமான பொருள் மதிப்பை சேர்த்து, 25 சதவீத தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கும், 75 ஆயிரம் ரூபாய் மானியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரேணுகாதேவி கூறியதாவது:கான்கிரீட் வீடு திட்டத்தில் 3,174 குடிசைகள் நடப்பாண்டில் தேர்வாகியுள்ளன. அதற்காக, 25 சதவீத நிதியாக 4.90 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. தற்போது, குடிசைகளை பிரித்து, நிலத்தை அளந்து அளவீடு செய்யப்படுகிறது. விரைவில் பணிகள் துவங்கிவிடும்.

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில், மாவட்ட அளவில் 4,258 பயனாளிகள் நடப் பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர் களுக்கும், தலா 75 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்படும். வழக்கமான அளவுகளில், மாடல்களில் தொகுப்பு வீடுகள் கட்டப்படும்.கான்கிரீட் வீடு கட்டும் போது, அரசு அறிவித் துள்ள மாடலில், 75 ஆயிரம் ரூபாய் மானியத் தொகையில் கட்டப்படும். வழக்கம்போல், அந்தந்த ஒன்றியங்கள் வாயிலாக, சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வழங்கப்படும். அதற்காக, மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

Last Updated on Friday, 03 September 2010 09:36
 


Page 26 of 69