Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Print PDF

தினமணி 25.07.2010

குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை, ஜூலை 24: மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிசைகளை கான்கிரீட் வீடாக்கும் பி.எஸ்.யூ.பி. திட்டத்துக்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரம் பேருக்கு கான்கிரீட் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திட்ட விதிமுறைப்படி ஒரு வீட்டின் அளவு 274 சதுர அடியாக இருக்க வேண்டும்.

மேலும் வீடு கட்டும் பணியின் ஒவ்வொரு நிலையாக 4 தவணைகளில் அந்தந்த மண்டல உதவி ஆணையர்கள் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. நிதி உதவி வழங்குவதில், காலதாமதம் ஏற்படுவதாக புகார் வரப்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் தாமதமின்றி உடனடியாக நிதியுதவி வழங்க உதவி ஆணைர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

ஆகவே குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் குடியிருப்போர் சம்பந்தப்பட்ட வார்டு மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, அதில் கூறியுள்ளபடி உரிய ஆவணங்களுடன் பூர்த்திசெய்து பணி உத்தரவை பெற்றுக்கொள்ளலாம். 5உடனடி நிதி உதவி செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 26 July 2010 09:05
 

ரூ.20 கோடியில் குடிசை பகுதி மேம்பாடு திட்டம் : நெல்லை மாநகராட்சியில் மாற்று பயனாளிகள் தேர்வு

Print PDF

தினமலர் 22.07.2010

ரூ.20 கோடியில் குடிசை பகுதி மேம்பாடு திட்டம் : நெல்லை மாநகராட்சியில் மாற்று பயனாளிகள் தேர்வு

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி பகுதியில் 20 கோடியில் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டம் அமலாக்கம் தொடர்பாக மண்டலம் வாரியாக மாற்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அவர்களுக்கு தேவையான குடியிருப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட 69 குடிசை பகுதிகளில் 67 குடிசை பகுதிகளை மேம்பாடு செய்ய 20 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய ஒப்புதல் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் சிலர் வேலை ஆணையை பெற்றும் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்பிக்கவில்லை. எனவே, மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே வழங்கிய வேலை ஆணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் தகுதியுடைய மாற்று பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்று பயனாளிகளால் புதிய வீடு கட்டுதல் மற்றும் வீடு மேம்படுத்துதல் பணிகள் நடந்து அப்பயனாளிகளுக்கு தவணை முறையில் மானிய தொகைகளும் வழங்கப்படுகிறது.

தற்போது தச்சநல்லூர் மண்டலத்தில் 224 புதிய குடியிருப்புகள், 415 குடியிருப்பு அபிவிருத்தி, பாளை மண்டலத்தில் 218 புதிய குடியிருப்புகள், 507 குடியிருப்பு அபிவிருத்தி, மேலப்பாளையம் மண்டலத்தில் 10 புதிய குடியிருப்புகள், 109 குடியிருப்பு அபிவிருத்தி, நெல்லை மண்டலத்தில் 298 புதிய குடியிருப்புகள், 222 குடியிருப்பு அபிவிருத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 750 புதிய குடியிருப்புகள், 1,253 குடியிருப்பு அபிவிருத்தி பணிகள் செய்யப்படுகிறது.

மாநகராட்சிக்கு உட்ப்ட 67 அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

Print PDF

தினமலர் 06.07.2010

வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

ஈரோடு: ஈரோட்டில் வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு நகரில் சம்பத்நகர், பெரியார் நகர், முத்தம்பாளையம் திட்டங்களில் வீடு கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 ஆண்டுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

நில உரிமையாளர்களுக்கும், வீட்டுவசதி வாரியத்தினருக்கும் இடையே நிலம் விலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலானோருக்கு வீட்டு பத்திரம் கிடைக்காமல் உள்ளனர். 25 ஆண்டுக்கு முன் வீடு வாங்கியவர்கள் அந்த வீட்டை பலரிடம் கை மாற்றியுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு சிலருக்கு மட்டும் வீட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியதாவது: சென்றாண்டு ஈரோடு பெரியார் நகர் ஸ்டோனி பிரிட்ஜ் அருகில், வீட்டுவசதி வாரியம் சார்பில், நவீன வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு விண்ணப்பம் கேட்கப்பட்ட உடனேயே ஒரு மாதத்தில் அனைத்து வீடுகளும் பதிவாகிவிட்டன. தற்போது லிஃப்ட் வசதியுடன் கூடிய அந்த வீட்டில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த வீடுகள் 570 சதுர அடியில் கட்டப்பட்டன. வீட்டின் விலை 9.65 லட்சம். தற்போது இதே வீடுகளுக்கு எதிரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை வீட்டுவசதி வாரியம் துவக்கியுள்ளது. மொத்தம் 72 வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டின் மொத்த அளவு 670 சதுர அடி. ஒரு ஹால், இரண்டு பெட்ரூம், ஒரு சமையல் அறை, பாத்ரூம் என கட்டப்படுகிறது. இதுதவிர வீட்டை ஒட்டி பால்கனி அமைக்கப்படுகிறது. லிஃப்ட் வசதியும் வருகிறது. இந்த வீட்டின் மதிப்பு 13.6 லட்சம் ரூபாய். அனைத்து வீடுகளுமே முடிந்து விட்டன. ஓராண்டுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 29 of 69