தினமணி 04.06.2010
குடிசைவாசிகள் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க கெடு
விருதுநகர், ஜூன் 3: அரசு திட்டப்படி, ஓலைக் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கான கணக்கெடுக்கும் பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் குடிசைவாசிகள் தங்களது குடிசைகள் குறித்து பதிவு செய்யாதோர் இம்மாதம் இறுதிக்குள் (ஜூன் 30) அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.