Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

மானியத்துடன் கூடிய கடனுதவி: வீட்டுவசதி வாரியம் அழைப்பு

Print PDF

தினமலர்       21.05.2010

மானியத்துடன் கூடிய கடனுதவி: வீட்டுவசதி வாரியம் அழைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்பகுதிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்ட விரும்புவோர் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம். இதுகுறித்து வீட்டுவசதி வாரியம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு வீடுகள் கட்ட மானிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெறலாம்.விண்ணப்பத்தாரர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் சொந்தமாக வீடுகள் இருத்தல் கூடாது. வீட்டுமனை பட்டா உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும். மாத வருமானம் ஐந்தாயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் அளவில் வீடுகள் கட்டுவதென்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 சதவீத மானிய வட்டியில் கடன் வழங்கப்படும். இதற்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள் குறைந்த வருவாய் பிரிவினராக கருதப்பட்டு அவர்களுக்கு 40 .மீட்டர் அளவில் வீடுகள் கட்டுவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும்.

இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வட்டி மானியம் வழங்கப்படும். கடன் தொகையை 20 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். கூடுதல் கடன்தொகை தேவைப் படுபவர்களுக்கு மானிய உதவியின்றி வங்கிகள் மூலம் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனடிப்படையில் புதிய வீடுகள் கட்ட கடனுதவி பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள் புதுக்கோட்டை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் டவுன் பஞ்.,பகுதிகளிலும் செயல்படுத்திட வேண்டும் : எம்..எல்.ஏ

Print PDF

தினமலர்   21.05.2010

குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் டவுன் பஞ்.,பகுதிகளிலும் செயல்படுத்திட வேண்டும் : எம்..எல்.

கடையநல்லூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து டவுன் பஞ்., பகுதிகளிலும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர உள்ள திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளாதாக பீட்டர் அல்போனஸ் எம்.எல்.. தெரிவித்தார்.

ஆய்க்குடியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சிமென்ட் தளம் 7.50 லட்ச ரூபாய் செலவிலும், அகரக்கட்டில் 19 லட்ச ரூபாய் செலவில் மேல்நிலை தொட்டி அமைக்கப்படுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் வள்ளிமயில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அந்தோணிவியாகப்பன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் காளியப்பன் வரவேற்றார்.

யூனியன் சேர்மன்கள் சட்டநாதன், காமராஜ், வட்டார காங்., தலைவர் கிளாங்காடு மணி, திமுக செயலாளர் ராமசுப்பிரமணியன், எம்.எல்.. அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், முன்னாள் வட்டார தலைவர் ஆய்க்குடி மணி, கவுன்சிலர் ராமசாமி உட்பட பலர் பேசினர்.

புதிய பணிகளுக்கான பூமி பூஜை விழாவினை துவக்கி வைத்து பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்..பேசியதாவது:- ஆய்க்குடி பகுதி மக்களுக்கு தேர்தல் நேரத்தில் தெரிவித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்பதை என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தினை கருத்தில் கொண்டு தாமிரபரணி குடிநீர் திட்டம் மேற்கொள்ளபட்டது பெறும் மகிழ்ச்சியாகும்.

இப்பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பகுதியில் சிமென்ட் தளம் அமைத்திட வேண்டும் என திருப்பணிதாரர்கள், ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து சிமென்ட் தளம் அமைக்கும் பணிக்காக தொகுதி எம்.எல்.. மேம்பாட்டு நிதியில் இருந்து 7.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகரகட்டில் குடிநீர் சீராக கிடைத்திடும் வகையில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயனாளிகள் கிராம பஞ்.,களில் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்தினை டவுன் பஞ்., பகுதிகளில் அமைந்துள்ள குடிசைவாழ் மக்களுக்கும் செயல்படுத்திட வேண்டும் என தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட காங்., துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், ஆலங்குளம் வட்டார காங்., தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், ஆய்க்குடி டவுன் பஞ்., இளைஞர் காங்., தலைவர் கார்வின், டவுன் பஞ்., இளநிலை பொறியாளர் அரிகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இலவச வீட்டுமனை திட்டத்துக்கு நிலம் வழங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி         17.05.2010

இலவச வீட்டுமனை திட்டத்துக்கு நிலம் வழங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், மே 16: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்துக்கு நிலம் வழங்க விரும்பும் நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வரவேற்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வீட்டுமனையின்றி வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்துக்கு 2010-11ம் நிதியாண்டுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கியுள்ளது.

தனியார் நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை கிரையம் செய்து பட்டா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத் திடத்துக்கு நிலம் வழங்க விருப்பமுள்ள நில உரிமையாளர்கள் அதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாவட்ட அளவிலான குழு கிரையத் தொகை நிர்ணயம் செய்து உடனடியாக வழங்கப்படும்.

தவிர, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் குடும்பங்களுக்கான மயானம் மற்றும் மயான பாதைகளுக்கு நிலம் வழங்க விரும்புவோரிடம் இருந்தும் ஒப்புதல் கடிதம் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நிலம் வழங்க உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம். இத்தகவலை ஆட்சியர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 


Page 34 of 69