தினமலர் 12.05.2010
ராயனூரில் சுகாதார வளாகம் பூமி பூஜை
கரூர்: தாந்தோணி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ராயனூரில் புதிதாக பொது சுகாதார வளாகம் அமைய பூமி பூஜை போடப்பட்டது. தாந்தோணி நகராட்சி, ராயனூரில் கரூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் எம்.பி., தம்பிதுரை கலந்து கொண்டு துவக்கிவைத்தார். மேலும், மூன்று லட்சம் மதிப்பில் ரேஷன் கடை ஒன்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இதே பகுதியில் தயாராகிவருகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, நகராட்சிதலைவர் ரேவதி, தாந்தோணி நகர செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், மணியம்மை, மோகன்ராஜ், கண்ணகி, ராஜு, இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் சுந்தர்ஜி மற்றும் பலர் பங்கேற்றனர்.