தினமலர் 18.05.2010
சுகாதார அலுவலக கட்டடம் திறப்பு விழா
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நகராட்சி சுகாதார அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. விருத்தாசலம் சாத்துகூடல் ரோட்டில் நகராட்சி சுகாதார அலுவலக புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. கமிஷனர் திருவண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, துப்புரவு அலுவலர் பரமசிவம், கவுன்சிலர் சாவித்திரி முன் னிலை வகித்தனர். கவுன்சிலர் ராமு வரவேற்றார். சேர்மன் முருகன் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். கவுன்சிலர்கள் கர்ணன், பாபு, அன்பழகன், துப்புரவு ஆய் வாளர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சிவப்பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உட் பட பலர் கலந்து கொண்டனர்.