தினமணி 18.05.2010
துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
விருத்தாசலம், மே 15: விருத்தாசலம் நகராட்சி சார்பில், சாத்துக்கூடல் சாலையில் துப்புரவு ஆய்வாளர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.÷
நகரமன்ற தலைவர் வ.க.முருகன் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். நகர்மன்ற உறுப்பினர் ராமு வரவேற்றார். நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை தலைமை தாங்கினார். ÷நகர்மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, துப்புரவு அலுவலர் பரமசிவம், நகர்மன்ற உறுப்பினர் சாவித்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.÷
நகர்மன்ற உறுப்பினர்கள் கர்ணன், பாபு, அன்பழகன், துப்புரவு ஆய்வாளர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சிவப்பிரகாசம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழன், ஆறுமுகம், சுப்பிரமணியன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.