தினமலர் 21.05.2010
வளவனூர் பேரூராட்சியில் கடைகள் பொது ஏலம்
விழுப்புரம்: வளவனூர் பேரூராட் சியில் புதிதாக கட் டப் பட்ட புதிய கடைகள் ஒரு லட் சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
வளவனூர் நான்கு முனை ரோட்டின் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின் கீழ் புதிதாக ஒன்பது கடைகள் கட்டப் பட்டுள்ளன. இந்த கடைகள் இந்தாண்டு ஏப்ரல் முதல் வரும் 2011ம் ஆண்டு மார்ச் முடிய ஒவ் வொரு கடைகளும் ஆயிரத்து 350 ரூபாய் முதல் ஆயிரத்து 550 ரூபாய் வரை பொது ஏலம் விடப் பட்டன. இவை ஒரு லட் சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டது. ஏலம் எடுத்தவர்களிடம் கடையின் சாவியை பேரூராட்சி சேர்மன் சம் பத் வழங்கினார். துணை சேர்மன் சரபோஜி, செயல் அலுவவலர் கன்னியப் பன், இளநிலை உதவியா ளர் ஷேக்லத்தீப், கவுன்சிலர்கள் குமாரி ராமு, ஷெரீப், குமார், விஜயா சேகர், தி.மு.க., நகர துணை செயலாளர் பெரியசாமி, ரகுமான், ராதா ஆகி யோர் உடனிருந்தனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடை சாவிகளும் வழங்கப்பட் டது.